திமுகவில் பெண் நிர்வாகிகளுக்கே பாதுகாப்பில்லை!-அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவில் பெண் நிர்வாகிகளுக்கே பாதுகாப்பில்லை!-அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 5, 2023, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில் வளத்தைப் பெருக்கும் வேலை வாய்ப்பு, வேளாண் வணிக உலகளாவிய சந்தைகளை உருவாக்கும் நோக்கமோ இந்த ஊழல் திமுக அரசிற்கு இல்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

 

இது குறித்து அவா் வெளிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ் மொழியும் நம் தர்மமும் செழித்து வளர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் தென்காசியில், #EnMannEnMakkal பயணம் பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது. நமது புனித பூமியான காசி, முகலாயர் படையெடுப்புக்கு ஆளான போது, பாண்டிய மன்னர் கனவில் சிவபெருமானே தோன்றி, தக்ஷிண… pic.twitter.com/kMuxSNHpur

— K.Annamalai (@annamalai_k) September 5, 2023

தமிழ் மொழியும் நம் தர்மமும் செழித்து வளர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் தென்காசியில், ”என் மண் என் மக்கள்” பயணம் பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது.

நமது புனித பூமியான காசி, முகலாயர் படையெடுப்புக்கு ஆளான போது, பாண்டிய மன்னர் கனவில் சிவபெருமானே தோன்றி, தக்ஷிண காசி திருக்கோவிலை நிர்மாணிக்கச் சொன்னதாக, ஜடாவர்மன் பராக்கிரமப் பாண்டிய மன்னர் கல்வெட்டே எழுதி வைத்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக, சேர நாட்டுடன் நம்மை இணைக்கும் பகுதியாக தென்காசி விளங்குகிறது. திருக்குற்றாலத்துக்கு நுழைவாயிலாக இருக்கும் இம்மண், உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிற ஊர் ஆகும்.

தொழில் செய்யும் சமூகங்கள் நிறைந்து வாழும் இப்பகுதியில், பணப்பயிர் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால், தொழில் வளத்தை பெருக்கும் வேலை வாய்ப்பையோ, வேளாண் வணிக உலகளாவிய சந்தைகளை உருவாக்கும் நோக்கமோ இந்த ஊழல் திமுக அரசிற்கு இல்லை.

தென்காசி இரயில் நிலையத்தின் தரத்தை உயர்த்திட அம்ரித் பாரத் ரயில் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு மட்டும் சுமார் 1650 கோடி ரூபாய் நமது மத்திய அரசுச் செலவிடுகிறது.

தென்காசி மாவட்டத்திற்கு திமுக கொடுத்த, ‘சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம், தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, தேங்காய் அடிப்படையிலான தொழிற்சாலை, ஆயிரப்பேரியில் வேளாண்மைக் கல்லூரி, புளியங்குடியில் எலுமிச்சையை அடிப்படையாக கொண்ட தொழிற்சாலை, கடையநல்லூரில் அரசுப் பாலிடெக்னிக் கல்லூரி, கால்நடை மருத்துவமனை ‘ என ஒரு தேர்தல் வாக்குறுதியையும் ஊழல் திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

தென்காசியில் திமுகவில் பெண் நிர்வாகிகளுக்கே பாதுகாப்பில்லை. இதை மறைக்க திமுக எத்தனை வேஷம் போட்டாலும் இனிமேல் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணியான இந்தியக் கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  நல்லாட்சியைத் தொடரச் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

7 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல்!

Next Post

உதயநிதி பேச்சுக்கு ராகுலும், நிதிஷ் குமாரும் மவுனம் காப்பது ஏன்? – ரவி சங்கர் பிரசாத் கேள்வி

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies