திமுக நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மறுக்கிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மறுக்கிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 29, 2023, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குன்னூர் மட்டுமல்ல, நீலகிரி மாவட்டம் முழுவதுமே நிறைய தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

”என் மண் என் மக்கள்” பயணம், ஊட்டி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத் தொகுதியில், மக்கள் பேரன்புடனும் ஆதரவுடனும் மகிழ்ச்சியாக நடந்தது. நீலகிரி, தேசியத்தையும், ஆன்மீகத்தையும் போற்றும் மண்.

மலைப்பகுதியின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் மண். கடந்த 2021 டிசம்பர் 8 அன்று, குன்னூரில் நடைபெற்ற கோர விபத்தில், முப்படைகளின் தலைவராக இருந்த ஜெனரல் பிபின் ராவத் காலமானார்.

அவருக்கு, வழி நெடுகிலும் நின்று, அஞ்சலியும் வீர வணக்கமும் செலுத்திய தேசியவாதிகள் நிறைந்த பகுதி குன்னூர். தேசமே மீளாத் துயரில் இருந்தபோது, குன்னூர் மக்களின் உணர்வு, அனைவருக்குமே மன நம்பிக்கையையும் மன வலிமையையும் கொடுத்தது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, குன்னூர் மக்களின் தேசப்பற்றை, பாராளுமன்றத்தில் பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.

குன்னூர் மட்டுமல்ல, நீலகிரி மாவட்டம் முழுவதுமே நிறைய தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் 2G புகழ் ஆ.ராஜா, சுற்றுலாப் பயணி வருவது போல, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தொகுதிக்கு வருகிறார்.

மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசச் சொன்னால், சனாதன தர்மத்தை தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருக்கிறார். காட்டு விலங்குகள் பிரச்சினை, 10000 குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சார வசதி இல்லாமல் இருப்பது, பட்டா இல்லாமல் இருப்பது, தனியார் வன உரிமைச் சட்டம் என மக்கள் பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் பேச, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், பாஜக உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சினைகளுக்காக, பாஜக இரண்டு முறை போராடி தீர்வு கண்டுள்ளது. மக்களுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் பாஜக மக்களோடு இருக்கிறது. தேயிலை விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை இன்றும் இருக்கிறது. தேயிலை ஆணையத்திடம் விலை உயர்த்திக் கொடுக்க… pic.twitter.com/WUgKpEsBvd

— K.Annamalai (@annamalai_k) September 28, 2023

கர்மவீரர் காமராஜர் அவர்கள், நீலகிரி மாவட்டத்துக்கு சிறப்புக் கவனம் எடுத்து, ஒன்பதாண்டு ஆட்சியில் பல அணைகள் கட்டினார். அதன் பலன், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு இன்று 833 மெகாவாட்.

பக்கத்து மாவட்டங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. அத்தனை தொலைநோக்குடன் திட்டங்கள் கொண்டு வந்தார் காமராஜர். ஆனால் திமுக ஆட்சியில், பெயர் அளவில் மாஸ்டர் டெவலப்மமெண்ட் ப்ளான் என்று வைத்துக் கொண்டு, காசு சம்பாதிக்கின்றார்கள். வாகன நிறுத்தம், நீலகிரி மாவட்டம் முழுவதுமே இருக்கும் பிரச்சினையாக உள்ளது.

குன்னூரில் உள்ள சர்வதேச பள்ளி, ஏழை எளிய சாதாரண மாணவர்களுக்கு எட்டாதது. இந்தியாவில் 2,78,356 மாணவர்கள் பயிலும் 625 நவோதயா பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 89% மாணவர்கள், கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.

25.4% மாணவர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இல்லை. நவோதயா பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி வழங்கப்படுகிறது.

ஒரு குழந்தையின் கல்விக்கு 85,000 ரூபாய் மத்திய அரசு செலவு செய்கிறது. ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகள், தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் சம்பாதிக்கவும், அரசியல் செய்யவும் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மறுக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஒரு மாவட்டத்துக்கு இரண்டு நவோதயா பள்ளிகள் கொண்டு வரப்படும் என்று உறுதி அளிக்கிறோம்.

நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சினைகளுக்காக, பாஜக இரண்டு முறை போராடி தீர்வு கண்டுள்ளது. மக்களுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் பாஜக மக்களோடு இருக்கிறது. தேயிலை விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை இன்றும் இருக்கிறது. தேயிலை ஆணையத்திடம் விலை உயர்த்திக் கொடுக்க வலியுறுத்தியிருக்கிறோம்.

தேயிலை விலை பிரச்சினையை பாஜக தீர்த்து வைக்கும் என்று உறுதி அளிக்கிறோம். நீலகிரி மாவட்டத்திற்கு தரமான மருத்துவம் கிடைக்க மருத்துவக் கல்லூரி கொடுத்திருக்கிறார் பிரதமர்.

படுகா சமூக மக்களுக்கான பழங்குடியினர் அந்தஸ்து, சொத்துக்கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மாநகராட்சி, நகராட்சி வாடகை உயர்வு, என தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக திமுக செய்துள்ள, ஏற்பட்டுள்ள அத்தனை பிரச்சினைகளையும் பாஜக சரி செய்யும்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல்வாதிகளை அண்ட விடக் கூடாது. ஊழலால் நாட்டின் வளர்ச்சி குறையும். இளைஞர்கள் கனவு நிறைவேறாது. கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என அனைத்துமே ஊழலால் பாதிக்கப்படும்.

ஆ. ராஜாவின் ஊழல் சொத்துக்களை சமீபத்தில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. வரும் பாராளுமன்ற தேர்தலில், ஆ.ராஜா எனும் ஊழல்வாதியை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த தமிழகத்தில் இருந்து, பெருமளவில் பாஜக சார்பாக மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Tags: annamalai en mann en makkal rallyk annamali bjp
ShareTweetSendShare
Previous Post

இந்திய இராணுவத்திற்கு 400 ஹோவிட்சர் ரக பீரங்கிகள்!- !

Next Post

தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies