காஷ்மீருக்கு வந்தாச்சு "விஸ்டாடோம் கோச்": இனி 360 டிகிரியில் பள்ளத்தாக்கின் அழகை ரசிக்கலாம்!
Sep 30, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீருக்கு வந்தாச்சு “விஸ்டாடோம் கோச்”: இனி 360 டிகிரியில் பள்ளத்தாக்கின் அழகை ரசிக்கலாம்!

Web Desk by Web Desk
Oct 21, 2023, 02:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக விஸ்டாடோம் கோச் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரயில் சேவையை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

370-வது பிரிவை ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில், விரைவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்று இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக விஸ்டாடோம் கோச் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. விஸ்டாடோம் கோச் என்பது பொழுதுபோக்கு மற்றும் இருக்கை போன்ற மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட அதிநவீன இரயிலாகும். இந்த இரயிலில், அகலமான கண்ணாடி ஜன்னல்கள், சுழலும் இருக்கைகள், தானியங்கி நெகிழ் கதவுகள், லக்கேஜ் ரேக்குகள், எல்.இ.டி. மற்றும் ஜி.பி.எஸ். தொழில்நுட்ட அமைப்பு ஆகிய வசதிகள் இருக்கும்.

மேலும், காஷ்மீரில் வரவிருக்கும் குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில், ஏர் கண்டிஷன் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இரயிலின் மேற்கூரை கண்ணாடியால் அமைக்கப்பட்டிருப்பதுதான் சிறப்பம்சமே. இதன் மூலம் 360 டிகிரியில் பள்ளத்தாக்கின் அழகை இரசிக்கலாம். இந்த விஸ்டாடோம் கோச் இரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் புதிய பயண சுகத்தை அனுபவிப்பார்கள். அதேபோல, பள்ளத்தாக்கு பகுதியில் நவீனகால பயண அனுபவத்தையும் அனுபவிப்பார்கள்.

இந்த இரயில் மூலம் புட்காம், காசிகுண்ட் மற்றும் பனிஹால் ஆகிய பகுதிகளின் இயற்கை அழகை மிக நெருக்கமாக உணர முடியும். குறிப்பாக, இந்த இரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், காஷ்மீர் மலைத்தொடர்கள், நெல் வயல்கள், ஆப்பிள் தோட்டங்கள், குங்குமப்பூ வயல்வெளிகள், பனி படர்ந்த பள்ளத்தாக்கு போன்ற அழகிய இடங்களை பரந்த தோற்றத்தில் கண்டு ரசிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், காஷ்மீரில் சுவிச்சர்லாந்தின் அனுபவத்தை உணரலாம்.

இந்த இரயிலுக்கான கட்டணம் 930 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது மிகக் குறைந்த கட்டணம் என்பதால், பனியால் மூடப்பட்டிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கின சுகத்தை அனுபவத்தைப் பெற மக்கள் தயாராகி வருகிறார்கள். மேலும், இந்த இரயில் ஆண்டு முழுவதும் இயங்கும் என்பதால், பள்ளத்தாக்கின் சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும்.

Tags: jammu kashmirWistadom Coach
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா : வெல்லப்போவது யாரு ?

Next Post

ககன்யான் வெற்றிக்குத் தமிழக ஆளுநர் வாழ்த்து!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies