பாடிகாட் முனீஸ்வரர் - ஆயுத பூஜை!
Mar 15, 2026, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடிகாட் முனீஸ்வரர் – ஆயுத பூஜை!

Murugesan M by Murugesan M
Oct 23, 2023, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் எத்தனையோ சிறப்பு மிக்க திருக்கோவில்கள் இருந்தாலும், மவுண்ட்ரோடு – சென்ரல் ரயில் நிலையம் இடையே பல்லவன் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு பாடிகாட் முனீஸ்வரர் திருக்கோவிலுக்குத் தனிச் சிறப்பு உண்டு.

காரணம், இந்த திருக்கோவிலில் வாகன ஓட்டிகளின் பாதுகாவலர் என்று சென்னைவாசிகளால் நம்பப்படுகிறது.

புதிதாக பைக், ஆட்டோ, டாக்ஸி என எந்த ஒரு வாகனமும் வாங்கினாலும், அவர்கள் அடுத்த நில நிமிடங்களில் செல்லும் இடம் அருல்மிகு பாடிகாட் முனீஸ்வரர் திருக்கோவில்தான்.

அது மட்டுமல்ல, திருணம், காது குத்து, கிரகக்கபிரவேஷம் என எந்த ஒரு முக்கிய நிகழ்வுக்கும் வாகனத்தில் செல்வோர் மற்றும் வெளியூர்களுக்கு நெடுந்தூரம் பயணம் செல்வோர் என அனைவரும் இந்த திருக்கோவிலுக்கு வந்து பூஜை செய்துவிட்டே பயணத்தைத் தொடர்வது வழக்கம்.

பெரிய பெரிய திருக்கோவில் போல் இங்கு கலை ஓவியங்களோ அல்லது பெரிய தூண்களோ எல்லாம் இல்லை. ஒரு சிறிய அறை. அதற்குள் அருள்மிகு ஸ்ரீபாடிகாட் முனீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. சன்னதி உள்ளே அரிவாள் ஏந்திய சிலை உள்ளது. பக்தர்கள் தங்கள் வாகனங்களின் சாவியைத் திருக்கோவிலின் பூசாரியிடம் கொடுத்து ஆசி பெறுகின்றனர்.

இந்த திருக்கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அலங்கரிக்கப்பட்டு எலுமிச்சை, கற்பூரம், பூ, தேங்காய் உள்ளிட்ட பொருட்களையும், மலர் மாலை அணிவித்தும் அலங்காரம் செய்கின்றனர். மேலும், வாகனத்தின் முன்பு திருஷ்டிக்காக கருப்பு கயிறு கட்டுகின்றனர். தேங்காய் உச்சியில் கற்பூரத்தை ஏற்றிவைத்து, அதை வாகனத்தின் முன்புறம் தங்கள் உரிமையாளருடன் சேர்ந்து சுழற்றி வழிபாடு நடத்துகின்றனர்.

பின்னர், வாகனத்தைச் சுற்றிச் தேங்காய் உடைக்கின்றனர். வாகனத்தின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது வாகன உரிமையாளர் ஓட்டுவார்கள். இதனால், வரும் காலத்தில் வாகனத்திற்கும் உரிமையாளருக்கும் எந்த ஒரு தீங்கு விளையாது என்று நம்புகின்றனர்.

இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 100 முதல் 200 வரையிலான வாகனங்கள் பூசை போடப்படும், ஆனால், பௌர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் இந்த எண்ணிக்கை 300 தாண்டும் என்கின்றனர் பூசாரிகள்.

சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் இந்த திருக்கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நமக்கு ஒருவரை பாடிகாட்டாக நியமித்துவிட்டால், அவர் நமது பாதுகாப்பில் எப்படி மிகுந்த அக்கறை செலுத்துவரோ அதுபோல், இந்த பாடிகாட் முனிஸ்வரரை சரண் அடைந்துவிட்டால், அவர் நமக்கு பாடிகாட்டாக வருவார் என்பது பக்தர்களின் அசைச்சக்க முடியாத நம்பிக்கை. இதற்த இங்கு வரிசை கட்டி நிற்கும் வாகனங்களே சாட்சி.

Tags: Badigat Muneeswararayitha pooji
ShareTweetSendShare
Previous Post

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்!

Next Post

சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி மறைவு!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies