இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கியத் தளபதி "காலி"!
Jan 14, 2026, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கியத் தளபதி “காலி”!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 1, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள், கண்ணில் கண்ட அனைவர் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திராத அளவுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டு மழையில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் இலக்குகளை இஸ்ரேல் தரைமட்டமாக்கி இருக்கிறது.

26-வது நாளாக இன்றும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி இப்ராஹிம் பியாரி மற்றும் 50-க்கும் மேற்ப்டட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் அந்த அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி. இவர், இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதோடு, அவ்வமைப்பின் அலுவலகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் தரைமட்டமானது” என்று தெரிவித்திருக்கிறது. எனினும், காஸா முனையில் அகதிகள் அதிகம் வசிக்கும் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 50 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, காஸா நகர சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், விமானப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமாடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

Tags: Isarael attackHamas commandar killed
ShareTweetSendShare
Previous Post

விரைவு பயணிகள் இரயில் தடம் புரண்டு விபத்து!

Next Post

இந்திய கிரிக்கெட் அணி குறித்துப் பேசிய நீரஜ் சோப்ரா !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies