ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணைவதற்கான ஜேஇஇ தேர்விற்கு இன்று முதல் வரும் 30 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், மாணவ செல்வங்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் கல்விச் சேவையை மிகச் சிறப்பாக வழங்கி வருகிறது. இதற்காக, கல்வியாளர்கள் பலரும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களை மனதார பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், IIIT மற்றும் பிற மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதாவது CFTI மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு (BE/B. Tech) சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ( JEE Main முதன்மை தேர்வு) நடைபெற உள்ளது.
மேலும், இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐஐடி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இந்த நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐஐடி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும்.
இந்த நிலையில், ஐஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இணைவதற்கான ஜேஇஇ தேர்விற்கு இன்று முதல் வரும் 30 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.