தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!
Jan 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

Murugesan M by Murugesan M
Nov 5, 2023, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்சியில் கலந்து கொள்ள தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார்.

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், புதிய கல்விக் கொள்கை எல்லா மாநிலங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.

வகுப்பு அறையில் உள்ள மாணவர்களை உலக அளவிற்கு உயர்த்துவதுதான் புதிய கல்விக் கொள்கை. ஆனால், அது தமிழகத்தில் அரசியலாக்கப்பட்டுள்ளது. நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால், இதர மாநிலங்களைவிடத் தமிழகத்தில் கல்வியில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது, இது தவிர்க்கப்பட வேண்டும்.

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட்டிற்கு என்றார்கள். ஆனால், இப்போது, நீட்டிற்கு கையெழுத்து எதிராக இயக்கம் நடத்துகிறார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, நீட் தெரியாதவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறார்கள்.

மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தற்போது சிறப்பாகச் செயல்படுகிறது. தம்பி உதயநிதி அவர்களே, நீங்கள் முட்டையைத் தூக்கிக் காண்பித்தீர்கள். ஆனால், ஈரோட்டில் குழந்தைகளுக்கு கொடுக்க வைத்திருந்த 1,200 முட்டைகள் அழுகி இருந்ததால், குழந்தைகளுக்குக் கொடுக்க முடியவில்லை. அது உங்களுக்குத் தெரியுமா. முதலில் அதைக் கவனியுங்கள்.

கண்டதேவி கோவில் தேரோட்டம் நடத்தாதது குறித்து நீதிமன்றமே கடும் விமர்ச்சனம் செய்துள்ளது. இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு, தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க முயற்சி செய்யுங்கள்.

முதலமைச்சர் 13 மொழிகளில் பேசுவதாகப் பெருமை கொள்கின்றனர். முதலில் பட்டியல் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பாருங்கள்.

தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் 167-வது பிரிவின்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதை ஆளுநரிடம் விவாதிக்கலாம்.

நட்புறவுடன் கூடிய அணுகுமுறையைத் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை, விருந்திற்கு அழைத்தால் கூட புறக்கணிக்கிறார்கள். புதுச்சேரியில்கூட காங்கிரஸ், தி.மு.க-வினர் வரமாட்டோம் என்று சொல்வது நல்ல பழக்க வழக்கம் அல்ல என்றார்.

Tags: Governor Tamilisai.
ShareTweetSendShare
Previous Post

திமுக 1957ல் கொடுத்த வாக்குறுதியே இன்னும் நிறைவேற்றவில்லை! – அண்ணாமலை

Next Post

அமைச்சர் கே.என்.நேரு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies