தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!
Sep 10, 2025, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்சியில் கலந்து கொள்ள தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார்.

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், புதிய கல்விக் கொள்கை எல்லா மாநிலங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.

வகுப்பு அறையில் உள்ள மாணவர்களை உலக அளவிற்கு உயர்த்துவதுதான் புதிய கல்விக் கொள்கை. ஆனால், அது தமிழகத்தில் அரசியலாக்கப்பட்டுள்ளது. நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால், இதர மாநிலங்களைவிடத் தமிழகத்தில் கல்வியில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது, இது தவிர்க்கப்பட வேண்டும்.

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட்டிற்கு என்றார்கள். ஆனால், இப்போது, நீட்டிற்கு கையெழுத்து எதிராக இயக்கம் நடத்துகிறார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, நீட் தெரியாதவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறார்கள்.

மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தற்போது சிறப்பாகச் செயல்படுகிறது. தம்பி உதயநிதி அவர்களே, நீங்கள் முட்டையைத் தூக்கிக் காண்பித்தீர்கள். ஆனால், ஈரோட்டில் குழந்தைகளுக்கு கொடுக்க வைத்திருந்த 1,200 முட்டைகள் அழுகி இருந்ததால், குழந்தைகளுக்குக் கொடுக்க முடியவில்லை. அது உங்களுக்குத் தெரியுமா. முதலில் அதைக் கவனியுங்கள்.

கண்டதேவி கோவில் தேரோட்டம் நடத்தாதது குறித்து நீதிமன்றமே கடும் விமர்ச்சனம் செய்துள்ளது. இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு, தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க முயற்சி செய்யுங்கள்.

முதலமைச்சர் 13 மொழிகளில் பேசுவதாகப் பெருமை கொள்கின்றனர். முதலில் பட்டியல் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பாருங்கள்.

தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் 167-வது பிரிவின்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதை ஆளுநரிடம் விவாதிக்கலாம்.

நட்புறவுடன் கூடிய அணுகுமுறையைத் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை, விருந்திற்கு அழைத்தால் கூட புறக்கணிக்கிறார்கள். புதுச்சேரியில்கூட காங்கிரஸ், தி.மு.க-வினர் வரமாட்டோம் என்று சொல்வது நல்ல பழக்க வழக்கம் அல்ல என்றார்.

Tags: Governor Tamilisai.
ShareTweetSendShare
Previous Post

திமுக 1957ல் கொடுத்த வாக்குறுதியே இன்னும் நிறைவேற்றவில்லை! – அண்ணாமலை

Next Post

அமைச்சர் கே.என்.நேரு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies