ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றுக்கு வருகிறது. உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்குள் நுழையப்போகும் அணிகள் யார் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் இன்றையப் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர்.
இதில் ரஹ்மானுல்லா 8 வது ஓவர் முடிய 25 பந்துகளுக்கு 21 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ரஹ்மத் ஷா களமிறங்கினார்.
இப்ராஹிம் மற்றும் ரஹ்மத் ஷா சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொண்டே வந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 24 வது ஓவரில் ரஹ்மத் ஷா 44 பந்துகளில் 30 ஓவர்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 37 வது ஓவரில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஷீத் கான் 3 சிக்சர் மற்றும் 2 பௌண்டரீஸ் என மொத்தமாக 35 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோல் தொடக்க வீரராக களமிறங்கிய இப்ராஹிம் சத்ரான் அட்டகாசமாக விளையாடி 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 129 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டும், மிட்சல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் சம்பா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.