பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி அதிகரிப்பு – குடியரசுத் தலைவர்!
Sep 9, 2025, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி அதிகரிப்பு – குடியரசுத் தலைவர்!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 இந்தியா 85 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இந்திய இராணுவ தளவாட தொழிற்சாலைகள் பணி அதிகாரிகள் மற்றும் இந்திய பாதுகாப்பு கணக்குப் பணி பயிற்சி அதிகாரிகள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.

அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், உள்நாட்டு மற்றும் உலகளாவிய மட்டத்தில் நாடு பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்திய இராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் பணி அதிகாரிகள் தங்கள் சேவையில் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

புதிய தொழில்நுட்பங்களின் தோற்றம் மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்கள் வேகமாகப் பரவுவதால், வளர்ந்த நாட்டை உருவாக்குவதிலும், இந்தியாவை உலகளவில் போட்டியிட வைப்பதிலும், அவர்களின் பங்கு இன்னும் முக்கியமானதாக மாறும். பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளம் அதிகாரிகளின் எண்ணங்கள், முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் பெரிய அளவில் பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்திய ஆயுதத் தொழிற்சாலைகள் பணி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைவதற்கான பயணத்தில் இந்தியா இறங்கியுள்ளது என்று கூறினார். தற்சார்பு, போட்டித்தன்மை மற்றும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதில் உள்நாட்டுத் தொழில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில் அரசாங்கம் பல கொள்கை முன்முயற்சிகளை எடுத்துள்ளது. உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. ஐ.ஓ.எஃப்.எஸ் அதிகாரிகள் பாதுகாப்பு அமைப்புகளில் உள்நாட்டுமயமாக்கலை முன்னெடுப்பவர்களாகவும் அனுசரணையாளர்களாகவும் இருப்பார்கள் என்றும், அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் திறன்களை மேம்படுத்த பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2013 -14 நிதியாண்டில் ரூபாய் 686 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, 2022-23 நிதியாண்டில் ரூபாய் 16 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. 85 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தனது திறன் மற்றும் வளர்ச்சியை இந்திய பாதுகாப்புத்துறை வெளிப்படுத்தி உள்ளது என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு இரயில் இயக்கம்!

Next Post

பயன்படுத்தாத யு.பி.ஐ. ஐடிகளுக்குத் தடை!

Related News

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies