விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள்: பட்டியல் வெளியிட்ட இஸ்ரேல்!
Jan 14, 2026, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள்: பட்டியல் வெளியிட்ட இஸ்ரேல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது. இவர்களில் 11 பேர் வெளிநாட்டவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலத்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்தில் 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை திக்குமுக்காட வைத்தனர்.

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். அதோடு, வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்ததாகவும், 3,500 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, காஸா மீது முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டது. இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது.

இஸ்ரேலின் தாக்குதலில் சுமார் 14,500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 30,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், காஸா நகரில் மின்சாரம், குடிநீர், மருந்து என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து, அமெரிக்கா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை ஹமாஸ் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதற்கு, இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்களை விடுவித்தால், பிணைக் கைதிகளை விடுவிப்பதாகத் தெரிவித்தனர்.

இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்ட நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக நேற்று 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கிறார்கள். பதிலாக, இஸ்ரேலும் 39 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்திருக்கிறது.

இந்த நிலையில், விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி,  ஆஷர் குடும்பத்தைச் சேர்ந்த டோரன் கட்ஸ்-ஆஷர், ராஸ் ஆஷர் , மற்றும் அவிவ் ஆஷர், அலோனி குடும்பத்தைச் சேர்ந்த டேனியல் அலோனி, அமெலியா அலோனி ஆகியோர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும், மோண்டர் குடும்பத்தைச் சேர்ந்த ரூத் மோண்டர், கெரன் மோண்டர், ஓஹாட் மோண்டர், இஸ்ரேலிய பிரஜைகள் ஆதினா மோஷே, ஹனா கட்ஸிர், மார்கலிட் மோஸஸ், ஹன்னா பெர்ரி, யாஃபே ஆதார் ஆகியோரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள் நாடு திரும்பியதும் உறவினர்களிடம் செல்லும்போது, ​​அனைத்து பாதுகாப்புப் படையினருடன் அரசாங்கமும் சென்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், “முதல்கட்டமாக பிணைக் கைதிகளில் குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் பெண்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு முழு உலகம்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தாயகம் திரும்பும் எங்கள் குடிமக்களை இஸ்ரேலிய அரசாங்கம் அரவணைக்கிறது. கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் அனைவரையும் திருப்பி கொண்டு வருவதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது.

எங்கள் குடிமக்கள் ஆரம்ப மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், பிணைக் கைதிகள் திரும்பி வந்தது குறித்து, நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: HamashostagesIsrael
ShareTweetSendShare
Previous Post

ஐயப்ப பக்தர்களுக்கு வழிகாட்டும் ஐய்யன் ஆப் – என்ன சிறப்பு?

Next Post

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகள்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies