மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பு!
Oct 2, 2025, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பு!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று பின்னிரவில் மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு பதிலாக சிறையில் இருந்து 33 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இன்று விடுதலை செய்தது.

இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்திருக்கிறது. இரு தரப்பு மோதலில் இஸ்ரேலில் 1,400 பேரும், காஸாவில் 14,500 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.  மேலும், 30,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களை விடுவிக்க கத்தார் உதவியுடன் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பயனாக முதலில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தொடர் பேச்சுவார்த்தையின் பலனாக மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நேற்று பின்னிரவு பெண்கள், குழந்தைகள் உட்பட மேலும் 11 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்திருக்கிறது.

இதற்கு பதிலாக 33 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் இன்று காலை விடுதலை செய்தது. இவர்கள், மேற்குக் கரையில் உள்ள ரமல்லா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல, ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட 240 பேரில் இதுவரை 62 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அதேசமயம், காஸா நகரில் 2 இஸ்ரேலியர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மீதி உள்ளவர்களையும் மீட்கும் வகையில் ஒவ்வொரு 10 பேர் விடுதலைக்கும் ஒரு நாள் போர் நிறுத்த செய்ய இஸ்ரேல் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்த தற்காலிகப் போர் நிறுத்தம் காரணமாக காஸா நகருக்கு கடந்த 4 நாட்களாக ஐ.நா.வின் நிவாரண வாகனங்கள் பெருமளவில் சென்றடைந்திருக்கின்றன. இதற்கிடையே, இஸ்ரேல் வந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், போரினால் பாதிக்கப்பட்ட காஸாவின புனரமைப்புக்கு உதவுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IsraelHamasreleasehostages
ShareTweetSendShare
Previous Post

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

உலக காலநிலை மாநாடு: நவம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி துபாய் பயணம்!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies