மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பு!
Jan 14, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 28, 2023, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று பின்னிரவில் மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு பதிலாக சிறையில் இருந்து 33 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இன்று விடுதலை செய்தது.

இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்திருக்கிறது. இரு தரப்பு மோதலில் இஸ்ரேலில் 1,400 பேரும், காஸாவில் 14,500 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.  மேலும், 30,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

இதனிடையே, இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களை விடுவிக்க கத்தார் உதவியுடன் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பயனாக முதலில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தொடர் பேச்சுவார்த்தையின் பலனாக மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நேற்று பின்னிரவு பெண்கள், குழந்தைகள் உட்பட மேலும் 11 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்திருக்கிறது.

இதற்கு பதிலாக 33 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் இன்று காலை விடுதலை செய்தது. இவர்கள், மேற்குக் கரையில் உள்ள ரமல்லா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல, ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட 240 பேரில் இதுவரை 62 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அதேசமயம், காஸா நகரில் 2 இஸ்ரேலியர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். மீதி உள்ளவர்களையும் மீட்கும் வகையில் ஒவ்வொரு 10 பேர் விடுதலைக்கும் ஒரு நாள் போர் நிறுத்த செய்ய இஸ்ரேல் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்த தற்காலிகப் போர் நிறுத்தம் காரணமாக காஸா நகருக்கு கடந்த 4 நாட்களாக ஐ.நா.வின் நிவாரண வாகனங்கள் பெருமளவில் சென்றடைந்திருக்கின்றன. இதற்கிடையே, இஸ்ரேல் வந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், போரினால் பாதிக்கப்பட்ட காஸாவின புனரமைப்புக்கு உதவுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IsraelHamasreleasehostages
ShareTweetSendShare
Previous Post

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

உலக காலநிலை மாநாடு: நவம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி துபாய் பயணம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies