ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஏவுகணை வீச்சு!
Jan 14, 2026, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஏவுகணை வீச்சு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 9, 2023, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஏவுகணை வீச்சு சம்பவம் நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் இராணுவத்துக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஆகவே, மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க நிலைகளின் மீது ஹமாஸ் ஆதரவு அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, சிரியா, ஈரான், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பினர் அமெரிக்க இராணுவ முகாம்கள் உள்ளிட்ட நிலைகளின் மீது சிறிய வகை ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால், தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஈராக்கில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் பகுதி பலத்த பாதுகாப்பு மிக்க “பச்சை மண்டலம்” என்று அழைக்கப்படும் பகுதியாகும். இங்குதான் ஈராக் அரசுக் கட்டடங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் ஆகியவை அமைந்திருக்கின்றன. இப்பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து தூதரக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், “பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.15 மணிக்கு தொடர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிட்டு வருகிறோம். எனினும், இதில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை” என்றாார்.

ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி காட்யுஷா வகையைச் சோ்ந்த 14 ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டன” என்றனர்.

இதனிடையே, ஈராக்கிய கதாயிப் சயீத் அல் ஷுஹாதாவின் தளபதி அபு அலா அல் வாலே கூறுகையில், “காஸாவிலும், அமெரிக்காவிலும் சியோனிச குற்றங்கள் தொடரும் வரை நடவடிக்கைகளை நிறுத்துவது அல்லது தளர்த்துவது என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.

கடந்த மாதம் கதாயிப் சயீத் அல் ஷுஹாதாவையும், அதன் பொதுச் செயலாளரையும் உலகளாவிய தீவிரவாதிகளாக அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஈராக் அதிபர் முகமது ஷியா அல் சூடானி கூறுகையில், “தூதரகங்களை இலக்கு வைப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று. தாக்குதலுக்கு காரணமானவர்களை தனது அரசாங்கம் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும்” என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “ஈராக்கில் சுதந்திரமாக செயல்படும் ஈரானுடன் இணைந்த போராளிகள், ஈராக்கில் உள்ள எங்கள் பணியாளர்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள எங்கள் கூட்டாளிகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.

Tags: iraqAmerican Embasyrocket attack
ShareTweetSendShare
Previous Post

86 வயது வேத அறிஞர் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்துகிறார்!

Next Post

மீண்டும் சென்னையில் கனமழை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies