ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஏவுகணை வீச்சு!
Sep 9, 2025, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஏவுகணை வீச்சு!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஏவுகணை வீச்சு சம்பவம் நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் இராணுவத்துக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஆகவே, மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க நிலைகளின் மீது ஹமாஸ் ஆதரவு அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, சிரியா, ஈரான், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பினர் அமெரிக்க இராணுவ முகாம்கள் உள்ளிட்ட நிலைகளின் மீது சிறிய வகை ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால், தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஈராக்கில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் பகுதி பலத்த பாதுகாப்பு மிக்க “பச்சை மண்டலம்” என்று அழைக்கப்படும் பகுதியாகும். இங்குதான் ஈராக் அரசுக் கட்டடங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் ஆகியவை அமைந்திருக்கின்றன. இப்பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து தூதரக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், “பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.15 மணிக்கு தொடர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பிட்டு வருகிறோம். எனினும், இதில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை” என்றாார்.

ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி காட்யுஷா வகையைச் சோ்ந்த 14 ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டன” என்றனர்.

இதனிடையே, ஈராக்கிய கதாயிப் சயீத் அல் ஷுஹாதாவின் தளபதி அபு அலா அல் வாலே கூறுகையில், “காஸாவிலும், அமெரிக்காவிலும் சியோனிச குற்றங்கள் தொடரும் வரை நடவடிக்கைகளை நிறுத்துவது அல்லது தளர்த்துவது என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.

கடந்த மாதம் கதாயிப் சயீத் அல் ஷுஹாதாவையும், அதன் பொதுச் செயலாளரையும் உலகளாவிய தீவிரவாதிகளாக அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஈராக் அதிபர் முகமது ஷியா அல் சூடானி கூறுகையில், “தூதரகங்களை இலக்கு வைப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று. தாக்குதலுக்கு காரணமானவர்களை தனது அரசாங்கம் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும்” என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “ஈராக்கில் சுதந்திரமாக செயல்படும் ஈரானுடன் இணைந்த போராளிகள், ஈராக்கில் உள்ள எங்கள் பணியாளர்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள எங்கள் கூட்டாளிகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.

Tags: iraqAmerican Embasyrocket attack
ShareTweetSendShare
Previous Post

86 வயது வேத அறிஞர் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்துகிறார்!

Next Post

மீண்டும் சென்னையில் கனமழை!

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies