மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் கைது: இந்தியா கொண்டுவர நடவடிக்கை!
Jun 18, 2025, 01:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் கைது: இந்தியா கொண்டுவர நடவடிக்கை!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில், அமலாக்கத்துறை வேண்டுகோளின் பேரில் இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், சூதாட்ட செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பால், துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சத்தீஸ்கரைச் சேர்ந்த சௌரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பர் ரவி உப்பால் இணைந்து மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. இவர்கள் துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இதன் மூலம் ஒரு நாளைக்கு 200 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த செயலி கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்ரில் தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு 508 கோடி ரூபாய் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த செயலி மூலம் பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெறுவதற்கு, இந்த சூதாட்ட செயலி பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதை அடுத்து சௌரவ் சந்திரகா், ரவி உப்பால் ஆகியோரை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமலாக்கத்துறை நாடியது. இதைத்தொடர்ந்து, இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு, சௌரவ் சந்திரகா், ரவி உப்பால் ஆகியோரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தது.

ரவி உப்பால் பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு என்ற நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பதையும், அதைப் பயன்படுத்தி அவர் சுதந்திரமாக சுற்றித் திரிவதையும் அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.

இந்த நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலியின் இரண்டு முக்கிய உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பால், துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரவி உப்பாலை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக, அமலாக்கத்துறை அதிகாரிகள் துபாய் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Enforcement departmentMahadev Gambling App Owner Arrested:
ShareTweetSendShare
Previous Post

ராமானுஜர் கோவிலில் நாயுடு வழிபாடு!

Next Post

மக்களவைத் தாக்குதல்: அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்… சபாநாயகர் அழைப்பு!

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies