அமலாக்கத்துறையால் 2014 முதல் 1.16 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்!
Jan 14, 2026, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறையால் 2014 முதல் 1.16 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 1.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 18-ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூா்வமாக பதிலளித்திருக்கிறார்.

அப்பதிலில், “சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2014 ஜனவரி முதல் 2023 அக்டோபா் 31-ம் தேதி வரை 1,16,792 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது. மேலும், 16,637.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தடைச் சட்டம் 2018-ன் கீழ் 16,740.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, 15,038.35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், கடந்த 2019 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2023 மாா்ச் 31-ம் தேதி வரையிலான 4 ஆண்டு காலத்தில் மட்டும் 69,045.89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி இருக்கிறது. அதேபோல, கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளில் 4 பேர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

தவிர, 3 பேரை இந்தியாவுக்கு நாடு கடத்த சம்பந்தப்பட்ட நாடுகளின் நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Parliamentjitendra singhunion minister of state
ShareTweetSendShare
Previous Post

எந்த சக்தியாலும் போரை தடுத்து நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர்!

Next Post

64.61 லட்சம் பேர் அரிவாள் உயிரணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்! – சுகாதார அமைச்சகம்

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies