அமலாக்கத்துறையால் 2014 முதல் 1.16 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்!
Oct 18, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறையால் 2014 முதல் 1.16 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 1.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 18-ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூா்வமாக பதிலளித்திருக்கிறார்.

அப்பதிலில், “சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2014 ஜனவரி முதல் 2023 அக்டோபா் 31-ம் தேதி வரை 1,16,792 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது. மேலும், 16,637.21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தடைச் சட்டம் 2018-ன் கீழ் 16,740.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, 15,038.35 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், கடந்த 2019 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2023 மாா்ச் 31-ம் தேதி வரையிலான 4 ஆண்டு காலத்தில் மட்டும் 69,045.89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கி இருக்கிறது. அதேபோல, கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளில் 4 பேர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

தவிர, 3 பேரை இந்தியாவுக்கு நாடு கடத்த சம்பந்தப்பட்ட நாடுகளின் நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருக்கின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Parliamentjitendra singhunion minister of state
ShareTweetSendShare
Previous Post

எந்த சக்தியாலும் போரை தடுத்து நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர்!

Next Post

64.61 லட்சம் பேர் அரிவாள் உயிரணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்! – சுகாதார அமைச்சகம்

Related News

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

மக்களுக்கு திமுக கொடுத்தது அல்வா மட்டும்தான் – வினோஜ் பி.செல்வம்

தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தேவை – வானதி சீனிவாசன்

டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல பேச வேண்டும் – அன்புமணி

தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதி விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!

நெல்லையில் பட்டாசு, புத்தாடை வாங்கி திரண்ட மக்கள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்கள் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies