அமெரிக்காவுக்கு இணையாக இந்திய சாலைகள்: நிதின் கட்கரி உறுதி!
Jul 26, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவுக்கு இணையாக இந்திய சாலைகள்: நிதின் கட்கரி உறுதி!

Web Desk by Web Desk
Dec 20, 2023, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவைப் போல மாறும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் 50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.

எந்த ஒப்பந்ததாரரும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு என்னை நேரில் சந்திக்க தேவையில்லை. அந்தளவுக்கு நாங்கள் முடிவெடுப்பதில் வெளிப்படையாகவும், விரைவாகவும் இருக்கிறோம். குறித்த நேரத்திற்குள் மிகவும் தரமாக வேலையை முடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.

அமைச்சகம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வங்கியாளர்கள் அனைவரையும் ஒரு குடும்பமாகக் கருதுகிறோம். தரமான வேலைகளை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அதனால்தான் 7 உலக சாதனைகளைச் செய்ய முடிந்தது. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் மகத்தான சாதனை இது.

அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சாலைகள் அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இருக்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். அதேபோல, 5 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்து முழுவதுமாக மாற்றமடையும், குறைந்த அளவு மாசுபாட்டுடன் போக்குவரத்து மாறும்.

மேலும், நெரிசல் மிகுந்த பெருநகரங்களில் 65,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான துவாரகா எக்ஸ்பிரஸ்வே மிகவும் முக்கியமானது. இது தலைநகர் டெல்லியில் உள்ள துவாரகாவில் இருந்து ஹரியானா மாநிலம் குர்கான் அருகில் உள்ள கேர்கி தவுலா டோல்கேட் வரை 27.6 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.

வரும் 2025-ம் ஆண்டு இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை பயன்பாட்டிற்கு வரும். இது 8 வழிச் சாலையாக அமைக்கப்படுவதுதான் கூடுதல் சிறப்பு. அதோடு, உயர்மட்ட சாலையாக 8 வழிச் சாலை அமைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 16 வழிச் சாலைகள் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன.

இது தவிர, நகர்ப்புற விரிவாக்க 6 வழிச்சாலை (ரூ.8,000 கோடி), கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலை (ரூ.12,000 கோடி), மற்றும் டெல்லி – மீரட் அதிவேக நெடுஞ்சாலை (ரூ.8,000 கோடி) ஆகியவை முக்கியமான திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  மணாலி மற்றும் லஹால் – ஸ்பிட்டி பள்ளத்தாக்கிற்கு இடையிலான ரோஹ்தாங் கணவாயில் அடல் சுரங்கப் பாதையானது, பயண நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 8 நிமிடமாகக் குறைத்திருக்கிறது.

அதேபோல், கத்ரா – டெல்லி அதிவேக நெடுஞ்சாலை, டெல்லி மற்றும் அமிர்தசரஸ் இடையே 4 மணி நேரத்திலும், டெல்லி மற்றும் கத்ரா (ஜம்மு காஷ்மீர்) இடையே 6 மணி நேரத்திலும், டெல்லி மற்றும் ஸ்ரீநகர் இடையே 8 மணி நேரத்திலும் சென்றுவிடலாம். தற்போது லடாக்கில், சோஜிலா கணவாயில் ஆசியாவின் மிகப்பெரிய சுரங்கப்பாதையின் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

பொதுப் போக்குவரத்தின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, இந்தியா தற்போது ரோப்வேக்கள், கேபிள் கார்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பொதுப் போக்குவரத்தை இயக்கி வருகிறது. மின்சாரப் பேருந்துகளை அதிக நகரங்களில் அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, புதிய எல்லைப் புறச் சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க வசதியாக 30 சாலைகள் உள்ளன. ஹெலிபோர்டுகள் மற்றும் ட்ரோன் துறைமுகங்களை கொண்ட 670 சாலையோர வசதிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது” என்றார்.

Tags: Nitin GadkariExpress Highwayamerica
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் குழந்தை திருமணங்களில் மேற்கு வங்கம் 41.4% முதலிடத்தில் உள்ளது!

Next Post

லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies