அமெரிக்காவுக்கு இணையாக இந்திய சாலைகள்: நிதின் கட்கரி உறுதி!
Jan 14, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவுக்கு இணையாக இந்திய சாலைகள்: நிதின் கட்கரி உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 20, 2023, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவைப் போல மாறும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் 50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.

எந்த ஒப்பந்ததாரரும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு என்னை நேரில் சந்திக்க தேவையில்லை. அந்தளவுக்கு நாங்கள் முடிவெடுப்பதில் வெளிப்படையாகவும், விரைவாகவும் இருக்கிறோம். குறித்த நேரத்திற்குள் மிகவும் தரமாக வேலையை முடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.

அமைச்சகம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வங்கியாளர்கள் அனைவரையும் ஒரு குடும்பமாகக் கருதுகிறோம். தரமான வேலைகளை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அதனால்தான் 7 உலக சாதனைகளைச் செய்ய முடிந்தது. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் மகத்தான சாதனை இது.

அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சாலைகள் அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இருக்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். அதேபோல, 5 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்து முழுவதுமாக மாற்றமடையும், குறைந்த அளவு மாசுபாட்டுடன் போக்குவரத்து மாறும்.

மேலும், நெரிசல் மிகுந்த பெருநகரங்களில் 65,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான துவாரகா எக்ஸ்பிரஸ்வே மிகவும் முக்கியமானது. இது தலைநகர் டெல்லியில் உள்ள துவாரகாவில் இருந்து ஹரியானா மாநிலம் குர்கான் அருகில் உள்ள கேர்கி தவுலா டோல்கேட் வரை 27.6 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.

வரும் 2025-ம் ஆண்டு இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை பயன்பாட்டிற்கு வரும். இது 8 வழிச் சாலையாக அமைக்கப்படுவதுதான் கூடுதல் சிறப்பு. அதோடு, உயர்மட்ட சாலையாக 8 வழிச் சாலை அமைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 16 வழிச் சாலைகள் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன.

இது தவிர, நகர்ப்புற விரிவாக்க 6 வழிச்சாலை (ரூ.8,000 கோடி), கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலை (ரூ.12,000 கோடி), மற்றும் டெல்லி – மீரட் அதிவேக நெடுஞ்சாலை (ரூ.8,000 கோடி) ஆகியவை முக்கியமான திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  மணாலி மற்றும் லஹால் – ஸ்பிட்டி பள்ளத்தாக்கிற்கு இடையிலான ரோஹ்தாங் கணவாயில் அடல் சுரங்கப் பாதையானது, பயண நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 8 நிமிடமாகக் குறைத்திருக்கிறது.

அதேபோல், கத்ரா – டெல்லி அதிவேக நெடுஞ்சாலை, டெல்லி மற்றும் அமிர்தசரஸ் இடையே 4 மணி நேரத்திலும், டெல்லி மற்றும் கத்ரா (ஜம்மு காஷ்மீர்) இடையே 6 மணி நேரத்திலும், டெல்லி மற்றும் ஸ்ரீநகர் இடையே 8 மணி நேரத்திலும் சென்றுவிடலாம். தற்போது லடாக்கில், சோஜிலா கணவாயில் ஆசியாவின் மிகப்பெரிய சுரங்கப்பாதையின் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

பொதுப் போக்குவரத்தின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, இந்தியா தற்போது ரோப்வேக்கள், கேபிள் கார்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பொதுப் போக்குவரத்தை இயக்கி வருகிறது. மின்சாரப் பேருந்துகளை அதிக நகரங்களில் அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, புதிய எல்லைப் புறச் சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க வசதியாக 30 சாலைகள் உள்ளன. ஹெலிபோர்டுகள் மற்றும் ட்ரோன் துறைமுகங்களை கொண்ட 670 சாலையோர வசதிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது” என்றார்.

Tags: Express HighwayamericaNitin Gadkari
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் குழந்தை திருமணங்களில் மேற்கு வங்கம் 41.4% முதலிடத்தில் உள்ளது!

Next Post

லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies