ஆஸ்கார் என்னைத் தேடி வரும் - 2018 படத்தின் இயக்குநர்!
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்கார் என்னைத் தேடி வரும் – 2018 படத்தின் இயக்குநர்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் பங்கேற்க உள்ள படங்களின் பட்டியலிலிருந்து 2018 திரைப்படம் தேர்வாகாத நிலையில் அப்படத்தின் இயக்குநர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெரும் மழை பெய்து மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்தது இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய படம் தான் 2018.

இப்படத்தைக் கேரளாவின் பிரபல மலையாள இயக்குநர் அந்தோணி ஜோசப் இயக்கினார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடித்திருந்தார்.

மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்தியாவின் பிற மொழிகளிலும் வெளியானது. அணைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்கள் பிரிவில் போட்டியிடுவதற்காக இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருதுக்கும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியலில் 2018 படம் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம். ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்படும் படங்களின் இறுதி பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

88 சர்வதேச மொழித் திரைப்படங்களில் 15 படங்கள் இறுதி செய்யப்பட்டன. இதில் ‘2018’ படம் இடம் பெறவில்லை என்பது வருந்தத்தக்கது. உங்கள் அனைவரையும் ஏமாற்றியதற்காக எனது நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இருப்பினும், இந்தப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த எனக்குக் கிடைத்த இந்தக் கனவு பயணத்தின் வாய்ப்பை என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன்.

அதிக வசூல் செய்த திரைப்படம் மற்றும் ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ படம் என்ற பெருமை ஒவ்வொரு இயக்குநரின் வாழ்க்கையிலும் நிகழ வேண்டும், எதிர்பார்க்கும் அரிய சாதனையாகும். இந்தப் பயணத்துக்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த கனவின் ஆரம்பம் இன்று தொடங்குகிறது. ஆஸ்கர் விருதுகள் காத்திருக்கின்றன. நான் கலந்துகொள்ளத் தயாராக இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Tags: 2018moviekerala filmoscar award
ShareTweetSendShare
Previous Post

தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்! – அண்ணாமலை

Next Post

2024-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies