மகாதேவ் சூதாட்ட செயலி: 15,000 கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது!
Sep 27, 2025, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாதேவ் சூதாட்ட செயலி: 15,000 கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாதேவ் பந்தய சூதாட்ட செயலி மூலம், ரூபாய் 15 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில், தீட்சித் கோத்தாரி என்பவரை மும்பை குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.

சத்தீஸ்கரைச் சேர்ந்த சௌரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பர் ரவி உப்பால் இணைந்து மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. இவர்கள் துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.

இந்த செயலி மூலம் மிகப்பெரிய பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்தச் செயலி மூலம் தினமும் 200 கோடி ரூபாய் வரை, இலாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை இலஞ்சமாக வழங்கி வந்துள்ளனர்.

இதை அடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மேலும், மகாதேவ் சூதாட்ட செயலியின் நிறுவனர்களான சௌரவ் சந்திரகா், ரவி உப்பால் ஆகியோரை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமலாக்கத்துறை நாடியது. இதைத்தொடர்ந்து, இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், சூதாட்ட செயலியின் உரிமையாளர்களான ரவி உப்பால் மற்றும் சௌரப் சந்திரகரை துபாய் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு மகாதேவ் பந்தய சூதாட்ட செயலி மூலம், ரூபாய் 15 ஆயிரம் கோடி மோசடி செய்த புகாரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மகாதேவ் பந்தய சூதாட்ட செயலி மூலம், ரூபாய் 15 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில், ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர். 27 வயதான தீட்சித் கோத்தாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags: Mahadev Gambling App Owner Arrested:Mahadev Gambling App
ShareTweetSendShare
Previous Post

ஹைதராபாத்தில் நடைபெற இருந்த பார்முலா ஈ ரேஸ் ரத்து!

Next Post

ட்ரம்ப் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்: ஜோ பைடன்!

Related News

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!

தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் மரியாதை!

கன்னியாகுமரியில் தொடர் மழை – குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்து தடை!

சிதம்பரத்தில் கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடி கைது!

சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை குறைத்த மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies