மகாதேவ் சூதாட்ட செயலி: 15,000 கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது!
Mar 15, 2026, 01:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாதேவ் சூதாட்ட செயலி: 15,000 கோடி மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது!

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாதேவ் பந்தய சூதாட்ட செயலி மூலம், ரூபாய் 15 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில், தீட்சித் கோத்தாரி என்பவரை மும்பை குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.

சத்தீஸ்கரைச் சேர்ந்த சௌரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பர் ரவி உப்பால் இணைந்து மகாதேவ் எனும் பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது. இவர்கள் துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.

இந்த செயலி மூலம் மிகப்பெரிய பணமோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்தச் செயலி மூலம் தினமும் 200 கோடி ரூபாய் வரை, இலாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை இலஞ்சமாக வழங்கி வந்துள்ளனர்.

இதை அடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மேலும், மகாதேவ் சூதாட்ட செயலியின் நிறுவனர்களான சௌரவ் சந்திரகா், ரவி உப்பால் ஆகியோரை கைது செய்ய இன்டர்போல் உதவியை அமலாக்கத்துறை நாடியது. இதைத்தொடர்ந்து, இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், சூதாட்ட செயலியின் உரிமையாளர்களான ரவி உப்பால் மற்றும் சௌரப் சந்திரகரை துபாய் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு மகாதேவ் பந்தய சூதாட்ட செயலி மூலம், ரூபாய் 15 ஆயிரம் கோடி மோசடி செய்த புகாரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மகாதேவ் பந்தய சூதாட்ட செயலி மூலம், ரூபாய் 15 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில், ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர். 27 வயதான தீட்சித் கோத்தாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags: Mahadev Gambling App Owner Arrested:Mahadev Gambling App
ShareTweetSendShare
Previous Post

ஹைதராபாத்தில் நடைபெற இருந்த பார்முலா ஈ ரேஸ் ரத்து!

Next Post

ட்ரம்ப் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்: ஜோ பைடன்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies