வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்ற கிஃப்ட் சிட்டிக்கு முக்கியப் பங்கு: நிர்மலா சீதாராமன்!
Mar 15, 2026, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்ற கிஃப்ட் சிட்டிக்கு முக்கியப் பங்கு: நிர்மலா சீதாராமன்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக் சிட்டி (கிஃப்ட் சிட்டி) முக்கியப் பங்கு வகிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் “வைபரன்ட் குஜராத்” உலக உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக ‘நவீன இந்தியாவின் விருப்பம் கிஃப்ட் சிட்டி’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் பேசுகையில், “இந்திய தொழில்முனைவோர் சர்வதேச அளவில் நிதி மற்றும் மூலதனத்தை திரட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் நிதி மற்றும் மூலதனத்துக்கான முனையமாக கிஃப்ட் சிட்டி திகழ்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம் 2047-ம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை அடைய பல்வேறு ஃபின்டெக் ஆய்வகத்தை உருவாக்குவதை கிஃப்ட் சிட்டி இலக்காகக் கொள்ள வேண்டும்

மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட கிஃப்ட் சிட்டியின் சர்வதேச நிதிச் சேவை மைங்களில் (ஐ.எஃப்.எஸ்.சி.) பங்குகளின் நேரடி பட்டியல் வெளியீடும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்பட்டியல் வெளியீடு விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அவ்வாறு இந்தியாவில் பட்டியலிடப்படும் உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளை இந்திய நிறுவனங்கள் எளிதாக அணுக முடியும். நிதி நிறுவனங்களுக்கான வரிச் சலுகை மையமாகவும் கிஃப்ட் சிட்டி உருவெடுத்திருக்கிறது.

கிஃப்ட் சிட்டி சர்வதேச நிதிச் சேவை மையங்களில் தற்போது 3 பங்கு பரிவர்த்தனை மையங்கள், 9 வெளிநாட்டு வங்கிகள் உள்பட 25 வங்கிகள், 26 விமான கடனுதவி நிறுவனங்கள், 80 நிதி மேலாளர்கள், 50 தொழில் சேவை அமைப்புகள், 40 நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்தியாவை கப்பலுக்கான உற்பத்தி மையமாக உருவாக்கும் வகையில், 8 கப்பல் கடனுதவி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சர்வதேச கடனுதவியை கப்பல் கட்டுமான நிறுவனங்கள் பெற முடியும். இந்தியாவில் கப்பல் கட்டுமான நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

கிஃப்ட் சிட்டி உலகுக்கான பன்முக நிதி தொழில்நுட்ப ஆய்வகங்களை கட்டமைத்து, இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைகளையும் பூா்த்தி செய்யும் மையமாக உருவெடுக்க வேண்டும். அதோடு, பசுமைக் கடன் வா்த்தகத்துக்கான தளத்தையும் உருவாக்க வேண்டும். அப்போதுதான் வரும் 2047-ல் 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்கும் இலக்கை எட்ட முடியும்” என்றார்.

Tags: Nirmala Sitharamanfinance ministerVibrant Gujarat Summit
ShareTweetSendShare
Previous Post

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கான ஒத்திகைதான் தற்போது நடக்கும் நிகழ்ச்சிகள்! – அண்ணாமலை

Next Post

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies