இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சின் முதல் பேட்டிங் முடிவில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இதன் முதல் போட்டி இன்று இந்தியாவில் தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளது.
இன்றையப் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் க்ராலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர்.
12வது ஓவரில் பென் டக்கெட் 35 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி போப் 1 ரன் மட்டுமே எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து தொடக்க வீரராக களமிறங்கிய ஜாக் க்ராலி 20 ரன்கள் அடித்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்பு ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஜோ ரூட் 29 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் இங்கிலாந்து அணி 125 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். பௌண்டரீஸ், சிக்சர்ஸ் என நடித்துக்கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்பு களமிறங்கிய டாம் ஹார்ட்லி 23 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.