போலியான தரவுகளால் நிரப்பப்பட்ட உரையை படிக்காததற்காக மாண்புமிகு ஆளுநர் மீது திமுக ஏன் கோபமாக இருக்கிறது? எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை துவக்கத்தில் தேசிய கீதம் பாடப்படவில்லையெனக்கூறி ஆளுநர் தனது உரையை புறக்கணித்து தமிழக அரசை விமர்சனம் செய்திருந்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.55 மணியளவில் ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது.
சிவப்பு கம்பள வரவேற்பில் தனது இருக்கைக்கு ஆளுநர் வந்தார். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அடுத்து தமிழக ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்கத்தொடங்கினார்.
ஆரம்பத்தில் தமிழில் முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர், எம்எல்ஏக்கள், சட்டசபை அலுவலகர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் தொடங்கும் போது வாசிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டை கூறினார்.
தமிழக அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்கவிரும்பவில்லையென தெரிவித்து தனது உரையை முடித்துக்கொண்டார். பின்னர் அவையை விட்டு வெளியேறினார்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,
போலியான உரிமைகோரல்கள் மற்றும் போலியான தரவுகளால் நிரப்பப்பட்ட உரையை படிக்காததற்காக மாண்புமிகு ஆளுநர் மீது திமுக ஏன் கோபமாக இருக்கிறது?
Why is the DMK antagonised with the Honourable Governor for not reading out a prepared speech filled with fake claims & fudged data?
Should we constantly remind Thiru @mkstalin of his speeches as opposition leader? pic.twitter.com/tz6enwS43O
— K.Annamalai (@annamalai_k) February 12, 2024
நாம் தொடர்ந்து நினைவுபடுத்த வேண்டுமா? முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஆற்றிய உரைகள் என்ன?
எனத் தெரிவித்துள்ளார்.