என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்! - அண்ணாமலை
Oct 2, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 28, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நமது என் மண் என் மக்கள் நடைப்பயணத்தின் வெற்றிக்கு பங்காற்றிய கட்சியின் ஆற்றல்மிகு ஒன்றிய நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், நமது மூத்த தலைவர்கள், நடைபயணப் பொறுப்பாளர்கள், இவர்கள் அனைவரோடு, ஒவ்வொரு தொகுதியிலும் பெரும் திரளெனக் கூடி பேரன்பை வெளிப்படுத்திய பொதுமக்கள் அனைவருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சி சாதனைகளை, தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் விதமாக தமிழக பாஜக சார்பில், என் மண் என்
மக்கள் பயணம், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று, நமது  மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா அவர்களால், ராமேஸ்வரம் மண்ணில் தொடங்கி வைக்கப்பட்டது.
கடந்த ஏழு மாதங்களாக தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பயணம் செய்திருக்கிறோம்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ஊழலையும், ஒரு குடும்பத்தையும், அடாவடித்தனத்தையும், லஞ்ச லாவண்யத்தையும் மட்டுமே முன்னிறுத்திய தமிழக
அரசியலில், பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசியல் சாத்தியம் என்பதை, நமது பாரதப் பிரதமரின் பத்தாண்டு கால நல்லாட்சி நிரூபித்திருக்கிறது.

அதன் நேர்மறை விளைவே, நமது என் மண் என் மக்கள் நடைபயணம் செல்லும் இடங்கள் எல்லாம், ஏழை எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், ளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பு மக்களும், தங்கள் பேராதரவை, மகிழ்ச்சி ஆரவாரத்தோடு, உற்சாக வரவேற்போடு வெளிப்படுத்தி, நமது பயணத்தை, இன்று ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறார்கள்.

நமது இந்த ஏழு மாதப் பயணத்தில், திமுக அரசால் பல தடைகளை எதிர்கொண்டோம். பழிவாங்கும் நோக்கத்தோடு, நமது நிர்வாகிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. வீண் பழிகள் சுமத்தப்பட்டன. கைது நடவடிக்கைகளுக்கும் உள்ளானோம். ஆனால் நமது நோக்கம் மிகப் பெரியது.

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பொதுமக்களும், நமது கட்சி சகோதர சகோதரிகளும் கொண்டுள்ள பேரன்பு, எவராலும் தடுக்கவோ, மறைக்கவோ முடியாதது என்பதை, திமுக விதித்த அத்தனை தடைக்கற்களையும் உடைத்தெறிந்து, இன்றைய தினம் நடைபயண நிறைவு விழாவில், நமது பிரதமர் அவர்களுக்கு நமது பயணத்தின் வெற்றியை நேரில் அர்ப்பணித்து நிரூபித்துள்ளோம்.

கடந்த ஏழு மாதங்களாக நாம் மேற்கொண்ட இந்த பயணத்தில், பல்வேறு பருவநிலைகளை எதிர்கொண்டுள்ளோம். கொட்டும் மழை, கடுங்குளிர், சுட்டெரிக்கும் வெயில் என பல்வேறு சூழல்களிலும், சற்றும் பின்வாங்காது. தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறோம்.

எதிர்பாராவிதமாக, சென்னை மாநகரமும், தென் மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளாகிய நேரத்தில் அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளும் மீட்புப் பணிகளும் மேற்கொள்வதற்காக, நடைபயணத்திற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த சில தொகுதிகளில், நமது பயண தேதியை மாற்றி
அமைக்கவும் நேரிட்டது.

ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, நமது குறிக்கோளான தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதி மக்களையும் நேரில் சந்திப்பது என்பதில் நாம் நிச்சயமாக வெற்றி கண்டுள்ளோம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் ஒரு நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக வேண்டும். நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி கொண்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும், நம் தமிழக மக்கள் அனைவருக்கும் தடையின்றிக் கிடைக்க வேண்டும்.

ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல், கடைக்கோடி மக்களுக்கும் அனைத்தும் சமமாகச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக, தங்கள் சுக துக்கங்களை மறந்து, நம் மக்களுக்காக, நம் சமூகத்துக்காக, நம் தொகுதிக்காக, நமது
மாநிலத்துக்காக, நமது நாட்டுக்காக என தன்னலமின்றிச் செயல்பட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும். வருக்கும். இந்த நேரத்தில் எனது உள்ளம் நிறைந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் நமது என் மண் என் மக்கள் நடைபயணம் செல்வது என்பது அத்தனை எளிதான பணி இல்லை. சரியான திட்டமிடல், முறையான தகவல் பரிமாற்றம், தெளிவான ஒருங்கிணைப்பு என ஒரு மகத்தான சாதனைப்
பயணத்தை நமது பாஜக சகோதர சகோதரிகள் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். கட்சிப் பணி என்பதைத் தாண்டி, தேச நலனுக்காக, நமது குழந்தைகள் எதிர்காலத்துக்காக, நமது
இளைஞர்கள் நல்வாய்ப்புகளுக்காக என ஒவ்வொருவரும் மனப்பூர்வமாகச் செயலாற்றியதால் மட்டுமே நமது என் மண் என் மக்கள் பயணத்தின் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: En man En makkalbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தது பாக்கியம்! – பிரதமர் மோடி

Next Post

தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்கள் – நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies