டெல்லியில் நாளை தொடங்குகிறது கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சி!
Jul 27, 2025, 03:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் நாளை தொடங்குகிறது கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சி!

Web Desk by Web Desk
Mar 2, 2024, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சியை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் நாளை டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கலங்கரை விளக்க இயக்குநரகம், கலங்கரை விளக்க புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது மார்ச் 3-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சியை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் டெல்லியில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர்கள் ஶ்ரீ பத் நாயக், சாந்தனு தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் இந்தியாவின் பரந்த கடற்கரைப் பகுதியில் உள்ள கலங்கரை விளக்கங்களின் அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் 100 புகைப்படங்களின் தொகுப்பு இடம்பெறும்.

கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சி கலங்கரை விளக்க சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கலங்கரை விளக்கங்களையும் சுற்றுலாத் தலங்களாக மாற்ற மத்திய துறைமுகங்கள் துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. இதன்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க கலங்கரை விளக்கங்கள் புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

பிப்ரவரி 28 அன்று, நாடு முழுவதும் 75 கலங்கரை விளக்கங்களில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் தனித்துவமான கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவது பிரதமரின் தொலைநோக்கு சிந்தனையாகும். கலங்கரை விளக்கங்கள் இயக்குநரகம் (DGLL) இந்தியா முழுவதும் கலங்கரை விளக்க சுற்றுலாவை மேம்படுத்துகிறது. பாரம்பரிய மற்றும் கடல்சார் அருங்காட்சியகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

நாளை தொடங்கும் கண்காட்சியில் பார்வையாளர்கள் கலங்கரை விளக்கங்களின் வளமான வரலாறு, அவற்றின் கலாச்சார, கட்டிடக்கலை மற்றும் கப்பல் செலுத்தல் அம்சங்களை அறிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படும்.

Tags: Lighthouse photo exhibition starts tomorrow in Delhi!
ShareTweetSendShare
Previous Post

சென்னை மக்களே உஷார்!: நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து!

Next Post

புறநகர் ரயில்கள் ரத்து – நாளை 150 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies