2.73 லட்சம் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்புக்கு உத்தரவாதம்! - இரயில்வே பாதுகாப்புப் படை
Jul 25, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2.73 லட்சம் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்புக்கு உத்தரவாதம்! – இரயில்வே பாதுகாப்புப் படை

கணக்கில் வராத ரூ.46.5 லட்சம் ரொக்கம், ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல்! -இரயில்வே பாதுகாப்புப் படை அதிரடி

Web Desk by Web Desk
Mar 7, 2024, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த பிப்ரவரியில், “குழந்தைச் செல்வங்கள் மீட்பு” எனும் (RPF) ஆர்பிஎஃப் நடவடிக்கை மூலம் 521-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டனர் என்று இரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இரயில்வே சொத்து, பயணிகளுக்கான வசதிகள் மற்றும் பயணிகளின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் ரயில்வே பாதுகாப்புப் படை உறுதியாக உள்ளது. இரயில்வே பாதுகாப்புப் படை பிப்ரவரி மாதத்தில், குழந்தை செல்வங்கள் மீட்பு எனும் நடவடிக்கை மூலம், பெற்றோர்களிடமிருந்து பிரிந்த குழந்தைகளை மீட்டதுடன், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் 521-க்கும் அதிகமான குழந்தைகளை அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பதில் ஆர்பிஎஃப் முக்கியப் பங்கு வகித்தது.

ஓடும் ரயில்களில் இருந்து இறங்கும்போது அல்லது ஏறும்போது தற்செயலாக விழுந்த 205 பயணிகள்  காப்பாற்றப்பட்டனர்.

“பெண்கள் பாதுகாப்பு” முன்முயற்சியின் கீழ், பிப்ரவரி  மாதத்தில் 228 “பெண்கள் பாதுகாப்பு” குழுக்கள் 10,659 ரயில்களில் 2.73 லட்சம் பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கின. பெண் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 7,357 பேர் மீது ஆர்.பி.எஃப் சட்ட நடவடிக்கை எடுத்தது.

தரகர்களுக்கு எதிரான நடவடிக்கையில், பிப்ரவரி மாதத்தில் 413 பேர் ஆர்.பி.எஃப் கைது செய்து சட்டப்படி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தது. மேலும், ரூ.39.50 லட்சம் மதிப்புள்ள ரயில்வே டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்னும் பாராட்டத்தக்க முயற்சியாக, 2024 பிப்ரவரி மாதத்தில் 86 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்து, ரூ.3.41 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இக்குற்றவாளிகள் மேல் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரமளிக்கப்பட்ட அரசு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ரயில் மதாத் போர்ட்டல் மற்றும் ஹெல்ப்லைன்  மூலம் பெறப்பட்ட பாதுகாப்பு தொடர்பான பயணிகள் புகார்களை ஆர்.பி.எஃப் உடனடியாக நிவர்த்தி செய்தது. பிப்ரவரி 2024 மாதத்தில் 20,059 க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன, அவற்றைத் தீர்க்க ஆர்.பி.எஃப் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது.

பிப்ரவரி 2024-ல், பயணிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 263 குற்றவாளிகளை ஆர்.பி.எஃப் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட காவல்துறையிடம் ஒப்படைத்தது.

பிப்ரவரி 2024-ல் ஓடும் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 41 பேரை ஆர்.பி.எஃப் கைது செய்தது.

மனிதாபிமான அணுகுமுறையுடன், பிப்ரவரி 2024 மாதத்தில் ரயில் பயணங்களின் போது 233 முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்த பயணிகளுக்கு ஆர்.பி.எஃப் உதவி வழங்கியது.

சட்டவிரோத சரக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்துதல்  நடவடிக்கையின் கீழ் பிப்ரவரி மாதத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை ரூ.79.31 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத புகையிலை பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களை பறிமுதல் செய்தது.

86 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் சம்பந்தப்பட்ட அரசின் சட்ட அமுலாக்க முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், கணக்கில் வராத ரூ.46.5 லட்சம் ரொக்கம், ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ரயில்வேயுடன் தொடர்பு கொள்ளும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பெண்கள் உட்பட வயது வந்தவர்கள் ஓடிப்போனவர்கள், கைவிடப்பட்டவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், ஆதரவற்றவர்கள், கடத்தப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள், கீழே விழுந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மீட்கப்படுகின்றனர். பிப்ரவரி மாதத்தில்  இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த  231 பேர் மீட்கப்பட்டனர்.

பிப்ரவரி மாதத்தில் ரூ.5.69 கோடி மதிப்புள்ள உடைமைகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், குறிப்பாக பெண் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், ரயில் பயணங்களின் போது பிரசவத்திற்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவவும், ஆபரேஷன் மாத்ரிசக்தியின் கீழ் பிரசவத்திலும் உதவி செய்கிறார்கள். பிப்ரவரி 2024-ல், ரயில்வே பாதுகாப்புப் படையின் பெண் பணியாளர்கள் இதுபோன்ற 06 குழந்தை பிறப்புகளுக்கு உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Safety guaranteed for 2.73 lakh women passengers! - Railway Protection Force
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேசம் – நேபாளம் எல்லையில் 13,000 அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் கண்டுபிடித்துள்ளது! – SIT

Next Post

வருமான வரி தாக்கல் : புதிய விதிகள் குறித்த முழு விவரம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies