முதல்வருக்கு ஞாபக மறதியா இல்ல குற்ற உணர்ச்சியா? - அண்ணாமலை கேள்வி
Jun 13, 2025, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வருக்கு ஞாபக மறதியா இல்ல குற்ற உணர்ச்சியா? – அண்ணாமலை கேள்வி

Web Desk by Web Desk
Mar 17, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் ஸ்டாலின், சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

கடந்த 1974 ஆம் ஆண்டு, தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால், கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதன் பிறகு பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, தேர்தல் காலங்களில் மட்டுமே அதன் ஞாபகம் வருவது விந்தை. கச்சத்தீவு விஷயத்தில் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம்.

இலங்கைப் போரின்போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும், மத்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டணியாகவும் இருந்த திமுக நடத்திய மூன்று மணி நேர உண்ணாவிரதம் உள்ளிட்ட கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர்தான் நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் மிகவும் அதிகரித்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை கடற்படையினரால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஊழல் செய்வதில் மும்முரமாக இருந்த திமுக, தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கை வெறும் மௌனமே.

முதல்வருக்கு

ஞாபக மறதியா இல்ல குற்ற உணர்ச்சியா?

கடந்த 1974 ஆம் ஆண்டு, தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால், கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதன் பிறகு பல முறை, மத்திய அரசில், பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு,… https://t.co/KLGgXjoFax pic.twitter.com/1Wpo53pV79

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 16, 2024

கடந்த 2014 ஆம் ஆண்டு, இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது, திமுக அன்றும் மௌனமாகத்தான் இருந்தது. அவர்களை பத்திரமாக மீட்டது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல், சட்டப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த பாரத நாடும், நமது மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, ஐம்பது ஆண்டுகள் மௌனமாக இருந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் ஸ்டாலின், சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

விடாது கருப்பு – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ED மீண்டும் சம்மன்!

Next Post

மேலும் ஒரு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Related News

இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை எண்ணி பயம் : சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க்

ஆந்திரா : பொது இடங்களில் மது அருந்த முயன்ற கும்பல் – ட்ரோன் மூலம் விரட்டியடிப்பு!

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் : தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 3 ஆயிரத்து 324 வீடுகள் கட்டுவதை ரத்து செய்ய ஒப்புதல்!

பிரான்ஸ் : சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை – அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை : விவசாயிகள் வேதனை!

பாக். ராணுவ பட்ஜெட் அதிகரிப்பு – எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேசத்தில் சூறையாடப்பட்ட கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம்!

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

கொடைக்கானல் : பெப்பர் அருவிக்கு ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள்!

தாமதமாக சென்றதால் விமானத்தை தவறவிட்ட பெண்!

WTC – இந்தியாவுக்கு ரூ.12.33 கோடி பரிசு தொகை!

நாங்குநேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு காரில் ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம்.!

எலான் மஸ்க் வருத்தம் : ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்!

பொன்முடிக்கு எதிரான வழக்கு : டிஜிபி, சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவிப்பு!

தென் ஆப்ரிக்கா : வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies