ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் : இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை!
Sep 7, 2025, 09:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் : இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Apr 11, 2024, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் காஸா நகரமே உருக்குலைந்துள்ளது.  ஹமாஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது.

இந்த போரில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா தீவிரவாத  அமைப்பு ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதேபோல், ஏமனின் ஹவுதி தீவிரவாதிகளும், ஹமஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேல் மற்றும் அதற்கு ஆதரவான நாடுகளின் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் தாக்குதல் நடத்துகிறது.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் தாக்கப்பட்டது. இதில், ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த 2 முக்கிய தளபதிகள் உட்பட 7 பேரும், சிரியாவைச் சேர்ந்த 4 பேரும், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலை எச்சரித்தது.

ஈரானின் எச்சரிக்கைக்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ஈரான் தனது பகுதியில் இருந்து இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுக்கப்படும். மேலும், ஈரான் மீது நாங்கள் நேரடியாக தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.

Tags: IsraelIranIsrael’s foreign ministerIsrael warns Iran
ShareTweetSendShare
Previous Post

‘தி கோட்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Next Post

எடப்பாடி பழனிசாமி பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார்: அண்ணாமலை பேச்சு

Related News

டிரம்ப் அளித்த விருந்தில் தடுமாறிய ஜாம்பவான்கள் : வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பிரம்மோற்சவ விழா – வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு ஊர்வலம்!

அதிரடியாக அறிவித்த டொயோட்டா : SUV கார்கள் விலை ரூ.3.49 லட்சம் வரை குறையுமாம் – சிறப்பு தொகுப்பு!

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை – பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 32 காவல் நிலைய மரணங்கள் – மனித உரிமை அமைப்பு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய சம்பவம் – இடப்பிரச்சனையால் நிகழ்ந்த கொடூரம்!

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies