ஈரோடு மாவட்டம், கோண வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள கொண்டத்து சமயபுரம் மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் கோவில் சித்திரை குண்டத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இந்த ஆண்டுக்கான குண்டம் இறங்கும் திருவிழா மற்றும் பொங்கல் விழா கடந்த 16-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய நிலையில், தினசரி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழாவில், ஈரோடு,நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.