ஈரோடு பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன.
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, கரூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறன.
பேருந்து நிலைய வணிக வளாகம் கடைகளின் முன்பகுதியில் பலர் ஆக்கிரமிப்பு செய்து தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலைய வணிக வளாகப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளின் பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆக்கிரமிப்பு கட்டடங்களையும் அகற்றினர்.