திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
செங்குன்றம் காமராஜர் நகர் ஜி.என்.டி.புறவழிச்சாலையில் தனியார் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது.
இங்கு வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அலெக்ஸாண்டரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.