இந்தியாவில் பிரதமர் மோடி செய்யும் நம்ப முடியாத மகத்தான பணிகள் அமெரிக்காவிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க நிதி நிறுவனர் ஜேமி டைமன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற பொருளாதார மன்ற மாநாட்டில் அந்நாட்டின் மிகப்பெரும் நிதி நிறுவனத்தின் தலைமை செயல் செயல் அதிகாரி ஜேமி டைமன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிவர்,
பிரதமர் மோடியை பாராட்டுவதாக தெரிவித்தார். மேலும் இந்திய பிரதமர் மோடி, 40 கோடிக்கும் மேலான இந்தியர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளார் எனவும், இந்தியாவுக்கு நம்ப முடியாத கல்வி முறையையும், அடிப்படை கட்டமைப்பையும் பிரதமர் மோடி தந்து இருக்கிறார் எனவும் ஜேமி டைமன் புகழாரம் தெரிவித்துள்ளார்.