போலி airbag விற்பனை : டெல்லியில் சிக்கிய கும்பல்!
Sep 11, 2025, 08:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி airbag விற்பனை : டெல்லியில் சிக்கிய கும்பல்!

Web Desk by Web Desk
Apr 28, 2024, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இன்றியமையாத பாதுகாப்பு அம்சங்களில் முக்கியமானதாக ஏர் பேக்குகள் திகழ்கின்றன. தற்போது அவற்றிலும் போலிகள் வந்து விட்டன இது பற்றி ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

துரதிர்ஷ்டமாக நடக்கும் விபத்துகளின் தாக்கத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன ஏர் பேக்குகள். மிக மிக எடை குறைவான மெல்லிய துணியால் ஒரு மெத்தை போல வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த காற்றுப்பைகள் வாகனங்களின் எல்லாப் பக்கங்களிலும் நமக்கு பாதுகாப்பை தருகின்றன .

விபத்து நடந்து ஒரு வினாடிக்குளாகவே விரைந்து விரிந்து தகுந்த பாதுகாப்பை வழங்குகின்றன கூடவே விபத்துகளின் போது ஏற்படும் மோதலால் உண்டாகும் தீவிர தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. இத்தனை முக்கியம் வாய்ந்த விஷயத்தில் போலிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .

சமீபத்தில் மத்திய டெல்லியில் உள்ள மாதா சுந்தரி சாலையில் விபத்துக்குள்ளான தனது காருக்கு பாதுகாப்பு ஏர்பேக் வாங்க ஒருவர் சென்றுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் விலை உள்ள ஏர்பேக் வெறும் 27,000 ரூபாய்க்கு கிடைத்தது. ஏர் பேக் வாங்க வந்த நபர் ஒரு காவலர் என்பதால் இந்த போலி ஏர்பேக் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

இது தொடர்பாக ரயீஸ், பைசான், ஃபர்கான் ஆகிய 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் . இவர்களிடம் நடந்த விசாரணையில், மத்திய டெல்லியில் , இந்த போலி ஏர் பேக்குகள் தயாரிக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் ஏறத்தாழ 2 கோடி ரூபாய் மதிப்புடைய 921 ஏர்பேக்குகள் மீட்கப்பட்டன.

விபத்துக்குள்ளான ஓட்டுநர்களே இந்த போலி ஏர் பேக்குகளின் முதல் தர வாடிக்கையாளர்கள்.
இந்த வகை போலி ஏர் பேக்குகளுக்கு எந்த உத்திர வாதமும் இல்லை என்பது தெரியாமலேயே பலரும் மலிவான விலை என்பதால் வாங்கி சென்று இருக்கிறார்கள்.

இந்த போலி ஏர் பேக்குகளை மற்ற மாநிலங்களுக்கும் கூரியர் மூலம் அனுப்பி இருக்கிறார்கள்

பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அனைத்து முக்கிய வாகன உற்பத்தியாளர்களுக்கும் டெல்லி காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

மலிவாக கிடைக்கிறது . ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கறுப்பு சந்தையில் விற்பனைக்கு வரும் பொருட்களை வாங்காமல் இருப்பதே நல்லது.

நியூஸ் டெஸ்க், தமிழ் ஜனம்

Tags: airbagdelhi police arrestduplicate airbags
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் : சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று மோதல்!

Next Post

தேச நலனை விட்டு வெகுதூரம் சென்று விட்ட காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

எரிந்து சிதைந்த நட்சத்திர விடுதி : உருக்குலைந்தது நேபாளத்தின் அடையாளம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ஆர் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமை – ஜெகநாத் மிஸ்ரா

பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா – இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!

தூய்மை பணியாளர் கைதின் போது போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை!

பிரதமர் மோடி மொரீசியஸ் பிரதமர் சந்திப்பு – இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

இமானுவேல் சேகரன் நினைவு தினம் – நயினார் நாகேந்திரன் மரியாதை!

பாரதியார் நினைவு தினம் – உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை!

போக்குவரத்து விதிமீறல் அபராத நிலுவை தொகையை கட்டினால் மட்டுமே இன்சூரன்ஸை புதுப்பிக்க முடியும் – போக்குவரத்து போலீசார் முடிவு என தகவல்!

அன்புமணியை நீக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்!

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies