பிரஜ்வல் ரேவண்ணா மீது விசாரணை நடத்த காங்கிரஸ் ஏன் தேர்தல் வரை காத்திருந்தது என கர்நாடக பாஜக மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவ குமாருக்கு பல மாதங்களுக்கு முன்பே தெரியும் என்றும், ஆனால், தேர்தல் நேரத்தில் அவற்றை பகிரங்கப்படுத்த அவர் காத்திருந்ததாகவும் விஜயேந்திர எடியூரப்பா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் அரசு ஏன் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றும், தேர்தல் வரை ஏன் காத்திருக்க வேண்டும் எனவும் விஜயேந்திர எடியூரப்பா வினவியுள்ளார்.