தேங்காய்பட்டிணம் கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடலை இரண்டு நாட்களுக்கு பின் மீனவர்கள் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பலம் பகுதியை சேர்ந்த பிரேமதாஸ் தனது 2 வயது மகள் ஆதிஷாவுடன் தேங்காய்ப்பட்டிணம் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது ராட்சத அலை வந்து இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் பிரேமதாஸ் மீட்கப்பட்ட நிலையில் ஆதிஷாவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு பின் ஆதிஷாவின் உடலை மீனவர்கள் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.