பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை சாதித்ததற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உழைப்பே காரணம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாநில அளவில் சிவகங்கை 2-ஆம் இடத்தை பிடித்ததற்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உழைப்பே காரணம் எனத் தெரிவித்தார்.
மேலும், அவர்களுக்கு தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.