கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில், பள்ளம் தோண்டி சாலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது, மார்த்தாண்டத்தில் 222 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்பட்டது.
ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, சமூக விரோதிகள் சிலர் மேம்பாலத்தில் பள்ளம் தோண்டி சாலையை சேதப்படுத்தியுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளார்.