விருதுநகரில் வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், 4 வீடுகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
விருதுநகர் ஏ.டி.பி காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன், அருகில் உள்ள சக்திவேல் என்பவரது வீட்டை விலைக்கு வாங்கி அதனை சீரமைத்து வந்தார்.
வீட்டின் மேல்தளம் கட்டுமான பணிகள் நிறைவடை நிலையில், திடீரென வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், அருகில் உள்ள 4 வீடுகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக பொது மக்கள் யாரும் பாதிக்கவில்லை.