மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே உடல்நலக்குறைவால் காலமானார்.
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர், 2 மாதங்களுக்கு முன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்த மாதவி ராஜே இன்று காலை 9.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் குவாலியர் நகரில் நடைபெறவுள்ளன.
நேபாள அரச குடும்பத்தைச் சேர்ந்த மாதவி ராஜே, மாதவராவ் சிந்தியாவை மணந்தார். கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த உ த்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில் நிகழ்ந்த விமான விபதில் மாதவ்ராவ் சிந்தியா உயிரிழந்தார்.