கன்னியாகுமரியில் போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை நடுக்கடலில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி வின்சென் என்பவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இது தொடர்பாக மாணவியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் கடலில் விசைப் படகில் சுற்றித்திரிந்த வின்சென்னை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.