தமிழர் தந்தை என போற்றப்படும் சி.பா.ஆதித்தனாரின் 43-வது நினைவு நாளை ஒட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சபாநாயகராக இருந்து சபையில் தமிழை ஒலிக்கச் செய்த ஐயா சி.பா.ஆதித்தனார், தமிழ் செய்திகளை பாமர மக்களும் தெரிந்துகொள்ளும் பணிகளை செய்து சரித்திரம் படைத்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழுக்கு தொண்டாற்றுவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.