சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தள பதிவில் அவர் விடுத்துள்ள பதிவில்,
தடுப்பணை கட்டும் பணியை எவ்வித அனுமதியும் இன்றி கேரள அரசு துவங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்
அமராவதி அணை மூலம் பாசன வசதி பெறும் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்வரத்து குறையும் எனவும் திருப்பூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்திற்குட்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் எனவும் சரத்குமார் கூறியுள்ளார்.