அமைச்சராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும் சீரிய மக்கள் பணி மேற்கொண்டவர் சி.பா.ஆதித்தனார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழ் இதழியல் துறையின் முன்னோடிகளில் ஒருவரான, ஐயா அமரர் சி.பா.ஆதித்தனார் அவர்களது நினைவு தினம் இன்று.
தமிழகத்தின் முக்கிய ஊடகங்களில் ஒன்றாக தினத்தந்தி நாளிதழை உருவாக்கியதோடு, சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்கியவர்.
அமைச்சராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும் சீரிய மக்கள் பணி மேற்கொண்டவர். தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.