பிரிட்டன் பொதுத்தேர்தலுக்கு முன் அகதிகள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.
பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக வரும் அகதிகளை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடு கடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், பிரிட்டன் பொதுத் தேர்தல் நடைபெறும் ஜூலை 4-ஆம் தேதி வரை இந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்படுவதாகவும், அதன்பின்னர்தான் நடைமுறைக்கு வரும் என்றும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.