மழையால் பாதிக்கப்பட்ட மானாவரி பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் நடந்த கட்சி பிரமுகரின் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், கர்நாடக அரசின் மேகதாது அணைகட்டும் முயற்சியை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.