உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைநிற்றல் இன்றி மாணவிகள் தொடர்ந்து உயர்கல்வி பயின்றிட மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 2.73 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகைக்காக கடந்த 3 ஆண்டுகளில் 13,241 பேருக்கு ஆயிரம் கோடி ரூபாய் கல்வி கடன் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டமும்,
150 கோடி ரூபாய் செலவில் உயர்கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறை செயல்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 63 கோடி ரூபாய் செலவில் சென்னை மாநில கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.