திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூலித் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செட்டியப்பட்டியை சேர்ந்த ஜோதிமணி அதே பகுதியை சேர்ந்த ராமேஸ்வரி என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
இந்நிலையில் போலி பத்திரத்தை காட்டி ராமேஸ்வரி வீட்டை அபகரிக்க முயற்சித்ததால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கணவர், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.