தேனியில் வீசிய தென்மேற்கு பருவக்காற்று காரணமாக பப்பாளி மரங்கள் விழுந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
தெய்வேந்திரபுரம் கிராமத்தில் சுபேஷ் என்பவருக்கு சொந்தமான பப்பாளி தோட்டம் அமைந்துள்ளது.
இந்நிலையில் ஆண்டு தோறும் வீசக்கூடிய தென்மேற்கு பருவக்காற்று வினாடிக்கு 12 மீட்டர் வேகத்தில் வீசியதால் சுபேஷின் பப்பாளி மரங்கள் விழுந்து சேதமடைந்தது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.