முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையால் தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், கேரள அரசு புதிய அணை கட்ட அனுமதி கேட்டு மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது.
இதற்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில் லோயர்கேம்ப் பகுதியில் தமிழக விவசாய சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கேரள அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.