மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருவதையடுத்து 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.