திருச்சி, பாலக்கரை அருகே பரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி, இவர் கடந்த 22-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஹக்கீம், ராஜசேகர் ஆகிய இருவரை கைது செய்தனர். அப்போது முகமது அலியிடம் திருட முயன்றபோது இருவரும் அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.