தேனியில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடமலைக்குண்டு அடுத்த கரட்டுப்பட்டி கிராமத்தில் பாலமுருகன், சசிக்குமார் ஆகியோர் வசித்து வந்தனர். இந்த இரு குடும்பத்துக்கும் இடையே கழிவுநீர் செல்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் பாலமுருகனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை, சசிக்குமாரின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.