பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளது.
அந்நாட்டின் தலைநகர் மொர்சிபியில் இருந்து தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 600 கிலோமீட்டருக்கு அப்பால் ஏங்கா மாகாணத்தில் உள்ள கவுகோளம் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துவிட்டதாகவும், 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதையுண்டதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.